நாட்டுக்கொரு நல்ல சேதி.....
விவேக் ஒரு படத்தில்.......
"டேய்..... ஏண்டா இன்னும் இந்த ரோஸையே கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்
ஒரு காலிபிளவர், அல்லது வாழைப்பூ கொண்டு போனால் அந்த 'பிகர்' இல்லாட்டி
அவள் அம்மா...... என்று நிறுத்தி, அவள் அம்மா அதை சமையலுக்கு உஸ்
பண்ணுவார்" என்பார். இப்படி நிறைய கொச்சை அர்த்த டயலொக் பேசிப், பேசியே
அவர் ஜனாதிபதி அவர்ட் வாங்கிவிட்டார்.
இப்பொழுது நாம் பேசப்போகும் விஷயம், அவர் அவர்ட் வாங்கியது இல்லை, அந்தப்
படத்தில் அவர் பேசிய வசனம். இது எவ்வளவு வக்கிரமான எண்ண அலைகளை
பார்ப்பவர் மனதில் வீசும் என்பதுதான். இதை காமடி என்ற பெயரில் எல்லா
தொல்லைக்காட்சிகளும் பலமுறை நம் வீட்டு வரவேற்பறைக்கே பரிமாறுகின்றன.
இன்று வெர்ஜின் மொபைல் விளம்பரம் ஒன்று,
அழகான வாலிபன், ஒரு வீட்டுக் கதவைத் தட்டுகிறான்...., ஒரு ஆன்டி தன்
பிள்ளைகளிடம் ஏதோ பேசிக் கொண்டே, கதவைத் திறக்கிறார்....
அந்த வாலிபன் தன் கையில் இருக்கும் ஒத்தை ரோஜாவை, அந்த ஆன்டி இடம்
கொடுத்து, "ஹாப்பி பர்த்டே 'அவள் பேரை சொல்லி சற்று............ இடைவெளி
விட்டு' ஆன்டி" என்கிறான்.
பின் அங்கிள் இன்றும் ஊருக்குச் சென்றுவிட்டாரா?" என்று கேட்டுக் கொண்டே
(அப்பொழுது பின்னால் அந்த ஆன்டியும் அவள் கணவனும் இருக்கும் போடோ
"டேட் இல்லையா?" என்கிறான்
அதற்கு "என்னுடன் எல்லாம் யார் டேட்க்கு
வருவார்கள்?" (இப்படி ஒரு ஆன்டி நமக்கு இல்லையே என்கிற ஆற்றாமை)
என்கிறாள்.
அலமாரியில் உள்ள CD ஒவ்வொன்றாய் பார்த்துக்கொண்டே, அவள் ஒவ்வொரு CD
எடுக்கும் போதும், இவன் தன் மொபைலில் இருந்து அவளுக்கு பிடித்தப்
பாட்டைப் போடுகிறான் (அதில் ருக்குமணி ருக்குமணி, அக்கம் பக்கம் என்ன
சத்தம் என்கிற பாடலும் அடக்கம்) போட்டுக்கொண்டே.........
"ஏன் நானில்லையா? உங்களுடன் பார்டிக்கு வருவதற்கு" என்கிறான்
"நீயா? நீ ரொம்ப நாட்டி" என்று ஆன்டி திரும்பும் போது அவள் மார்பு
ஓட்டும் தூரத்தில் அவன் நிற்கிறான்
உடனே இரண்டு டிக்கெட்டைக் காட்டி "பிக்சருக்கு போலாமா?" என்கிறான்
அந்த நேரத்தில் அந்த ஆன்டி இன் மகள் வந்து "அம்மா!!!" என்கிறாள்
அவளைக்கண்டதும் ஆன்டி "ஏன் நீ 'மகள் பேரைச் சொல்லி' அவளுடன் போயேன்
(என்னே ஒரு கலைத் தாய்!! இப்படி ஒரு தாய் எல்லோருக்கும் வேண்டும் என்று
தவமிருக்க வேண்டும் தன் மகளை வேசியாக்கத் துடித்தத் தாய்!!!) என்கிறாள்.
எவ்வளவு வக்கிரமான ஓர் எண்ணம் இந்த விளம்பரத்தை தினமும் குறைந்தது 50
முறையாவது எல்லா தொல்லைக்காட்சிகளும் ஒளிபரப்புகின்றன. யாருக்குமே ஒரு
சமுதாயப் பார்வை இல்லை. இன்று நம் நேரத்தில் முக்கால்வாசியை
தொலைக்காட்சிகளே விழுங்கி விடுகின்றன. அப்படி இருக்கும் போது
தொலைக்காட்சி விளம்பரம் என்பது மிகவும் சக்திவாய்ந்த மீடியா. அதில்
இதுமாதிரி வக்கிரமான எண்ணங்களை விதைத்தால், அது ஒரு மோசமான கலாச்சார
சீரழிவையே ஏற்படுத்தும்.
கமல், அன்பே சிவம் என்னும் படனத்தில் மாதவனை (அப்படத்தில் மாதவன் ஒரு
விளம்பரப் படம் எடுப்பவர்) வெளிநாட்டுக்காரன் பொருட்களை கூவிக், கூவி
விற்கும் கூலி என்று சொல்லுவார். ஆனால் அவரின் மகள், ஒரு ஐஸ்
விளம்பரத்தில், ஒருவன் அவரிடம் தன் காதலை சொல்லுவது போல்
நடித்திருப்பார் (ஊருக்குத்தான் உபதேசம் போலும்). விஜய் கோக்
விளம்பரத்தில் வந்து எல்லாத் தோழனையும் கோக் குடிக்கச் சொல்லுகிறார்
(கோக் மீதான குற்றச் சாட்டு இன்னும் தீர்க்கப்படவில்லை)
இவர்களுக்கெல்லாம் புலிகேசி தண்டனைதான் சரி.
விளம்பரத் தயாரிப்பென்பது, நிறையப் பேருக்கு வேலைத் தருகிறது. ஒரு
விளம்பரத்தை உருவாக்க கலை இயக்குனர், அரங்க அமைப்பாளர், ஒலி, ஒலி
அமைப்பாளர், இவர்களை எல்லாம் இயக்கும் இயக்குனர், நடிகர்கள்,
இசையமைப்பாளர், இசைக் கோர்பாளர் என்று அது ஒரு பெரிய தொழிற்சாலை, நிறையப்
பேருக்கு 'படி' அளக்கிறது. இத்தனை நிலைகளைத் தாண்டியும், இதுபோல்
வக்கிரமான எண்ணங்கள் வெளிவருமானால்... அது வக்கிரம் என்பதை நம் மனது
அங்கீகரிக்காதையே காட்டுகிறது. நம் மனது இதுபோல் அரக்க எண்ணங்களால்
புரையோடியிருப்பதே இதற்குக் காரணம்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும், அதில் ஒளிபரப்பப்படும்
விளம்பரங்களுக்கும் தணிக்கை செய்வதற்கான நேரம் இதுதான் நாம் தாமதிக்கும்
ஒவ்வொரு மணித்துளியும் ஒரு நஞ்சு விதை முளைக்கிறது என்பதை உணர்ந்து
துரிதகதியில் உரியவர்கள் செயல்பட்டால் நாளைய சமுதாயம் காக்கப்படும்.
நாம் நம் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லும் சமுதாய சூழ்நிலைகளே அவர்களின்
மிகப் பெரிய சொத்து. நல்லதை விதைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, நஞ்சை
விதைக்காமல் இருந்தால் போதும்.
கலாசார காவலர்களே!!! பப்புக்குச்செல்வதை நிறுத்தி, இதுபோல் நம் வாழ்வியலை
சிதப்பவர்களை களைஎடுங்கள்.
இதில் சில நல்ல விளம்பரங்களும் வருகின்றன , Vodofone பொம்மைகள்
விளம்பரம், ஹவெல்ஸ் வயர் விளம்பரம், 'செக்கச்லோவாக்கிய' என்று சொல்லும்
அந்த குழந்தை விளம்பரம், என்று வெகு சிலவே ரசிக்கும்படி இருக்கிறது.
இவைதவிர்த்து, எல்லா விளம்பரமும் பெண்ணை எப்படி கவர்வது, பெண்ணிடம்
எப்படி காதலைச் சொல்வது என்பனவையே. எல்லாமே ஒரு பொய்யான மாயையை
தோற்றுவிக்கின்றன. என்னமோ இவர்கள் பொருளை உபயோகிக்கவில்லை என்றால் உலகில்
பெண்களோ, ஆண்களோ காதலிக்கவே முடியாது, வெள்ளைதான் அழகு, இந்த பானத்தைக்
குடிக்காத பிள்ளைகள் அறிவில்லாமல் போகும் என்று ஒரு போய்த் திரையை
எல்லோர் முன்னாடியும் வைக்கின்றன.
என் அப்பன் பாட்டன் காதலிக்கவில்லையா, கல்யாணம்தான் கட்டிக்
கொள்ளவில்லையா? ஆதலினால் உலகத்தீரே!!! பஜார்ல உஜ்ஜாரா இல்லன்னா நம்ம
நிஜார.....
"திருடனாப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!!!"
"டேய்..... ஏண்டா இன்னும் இந்த ரோஸையே கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்
ஒரு காலிபிளவர், அல்லது வாழைப்பூ கொண்டு போனால் அந்த 'பிகர்' இல்லாட்டி
அவள் அம்மா...... என்று நிறுத்தி, அவள் அம்மா அதை சமையலுக்கு உஸ்
பண்ணுவார்" என்பார். இப்படி நிறைய கொச்சை அர்த்த டயலொக் பேசிப், பேசியே
அவர் ஜனாதிபதி அவர்ட் வாங்கிவிட்டார்.
இப்பொழுது நாம் பேசப்போகும் விஷயம், அவர் அவர்ட் வாங்கியது இல்லை, அந்தப்
படத்தில் அவர் பேசிய வசனம். இது எவ்வளவு வக்கிரமான எண்ண அலைகளை
பார்ப்பவர் மனதில் வீசும் என்பதுதான். இதை காமடி என்ற பெயரில் எல்லா
தொல்லைக்காட்சிகளும் பலமுறை நம் வீட்டு வரவேற்பறைக்கே பரிமாறுகின்றன.
இன்று வெர்ஜின் மொபைல் விளம்பரம் ஒன்று,
அழகான வாலிபன், ஒரு வீட்டுக் கதவைத் தட்டுகிறான்...., ஒரு ஆன்டி தன்
பிள்ளைகளிடம் ஏதோ பேசிக் கொண்டே, கதவைத் திறக்கிறார்....
அந்த வாலிபன் தன் கையில் இருக்கும் ஒத்தை ரோஜாவை, அந்த ஆன்டி இடம்
கொடுத்து, "ஹாப்பி பர்த்டே 'அவள் பேரை சொல்லி சற்று............ இடைவெளி
விட்டு' ஆன்டி" என்கிறான்.
பின் அங்கிள் இன்றும் ஊருக்குச் சென்றுவிட்டாரா?" என்று கேட்டுக் கொண்டே
(அப்பொழுது பின்னால் அந்த ஆன்டியும் அவள் கணவனும் இருக்கும் போடோ
"டேட் இல்லையா?" என்கிறான்
அதற்கு "என்னுடன் எல்லாம் யார் டேட்க்கு
வருவார்கள்?" (இப்படி ஒரு ஆன்டி நமக்கு இல்லையே என்கிற ஆற்றாமை)
என்கிறாள்.
அலமாரியில் உள்ள CD ஒவ்வொன்றாய் பார்த்துக்கொண்டே, அவள் ஒவ்வொரு CD
எடுக்கும் போதும், இவன் தன் மொபைலில் இருந்து அவளுக்கு பிடித்தப்
பாட்டைப் போடுகிறான் (அதில் ருக்குமணி ருக்குமணி, அக்கம் பக்கம் என்ன
சத்தம் என்கிற பாடலும் அடக்கம்) போட்டுக்கொண்டே.........
"ஏன் நானில்லையா? உங்களுடன் பார்டிக்கு வருவதற்கு" என்கிறான்
"நீயா? நீ ரொம்ப நாட்டி" என்று ஆன்டி திரும்பும் போது அவள் மார்பு
ஓட்டும் தூரத்தில் அவன் நிற்கிறான்
உடனே இரண்டு டிக்கெட்டைக் காட்டி "பிக்சருக்கு போலாமா?" என்கிறான்
அந்த நேரத்தில் அந்த ஆன்டி இன் மகள் வந்து "அம்மா!!!" என்கிறாள்
அவளைக்கண்டதும் ஆன்டி "ஏன் நீ 'மகள் பேரைச் சொல்லி' அவளுடன் போயேன்
(என்னே ஒரு கலைத் தாய்!! இப்படி ஒரு தாய் எல்லோருக்கும் வேண்டும் என்று
தவமிருக்க வேண்டும் தன் மகளை வேசியாக்கத் துடித்தத் தாய்!!!) என்கிறாள்.
எவ்வளவு வக்கிரமான ஓர் எண்ணம் இந்த விளம்பரத்தை தினமும் குறைந்தது 50
முறையாவது எல்லா தொல்லைக்காட்சிகளும் ஒளிபரப்புகின்றன. யாருக்குமே ஒரு
சமுதாயப் பார்வை இல்லை. இன்று நம் நேரத்தில் முக்கால்வாசியை
தொலைக்காட்சிகளே விழுங்கி விடுகின்றன. அப்படி இருக்கும் போது
தொலைக்காட்சி விளம்பரம் என்பது மிகவும் சக்திவாய்ந்த மீடியா. அதில்
இதுமாதிரி வக்கிரமான எண்ணங்களை விதைத்தால், அது ஒரு மோசமான கலாச்சார
சீரழிவையே ஏற்படுத்தும்.
கமல், அன்பே சிவம் என்னும் படனத்தில் மாதவனை (அப்படத்தில் மாதவன் ஒரு
விளம்பரப் படம் எடுப்பவர்) வெளிநாட்டுக்காரன் பொருட்களை கூவிக், கூவி
விற்கும் கூலி என்று சொல்லுவார். ஆனால் அவரின் மகள், ஒரு ஐஸ்
விளம்பரத்தில், ஒருவன் அவரிடம் தன் காதலை சொல்லுவது போல்
நடித்திருப்பார் (ஊருக்குத்தான் உபதேசம் போலும்). விஜய் கோக்
விளம்பரத்தில் வந்து எல்லாத் தோழனையும் கோக் குடிக்கச் சொல்லுகிறார்
(கோக் மீதான குற்றச் சாட்டு இன்னும் தீர்க்கப்படவில்லை)
இவர்களுக்கெல்லாம் புலிகேசி தண்டனைதான் சரி.
விளம்பரத் தயாரிப்பென்பது, நிறையப் பேருக்கு வேலைத் தருகிறது. ஒரு
விளம்பரத்தை உருவாக்க கலை இயக்குனர், அரங்க அமைப்பாளர், ஒலி, ஒலி
அமைப்பாளர், இவர்களை எல்லாம் இயக்கும் இயக்குனர், நடிகர்கள்,
இசையமைப்பாளர், இசைக் கோர்பாளர் என்று அது ஒரு பெரிய தொழிற்சாலை, நிறையப்
பேருக்கு 'படி' அளக்கிறது. இத்தனை நிலைகளைத் தாண்டியும், இதுபோல்
வக்கிரமான எண்ணங்கள் வெளிவருமானால்... அது வக்கிரம் என்பதை நம் மனது
அங்கீகரிக்காதையே காட்டுகிறது. நம் மனது இதுபோல் அரக்க எண்ணங்களால்
புரையோடியிருப்பதே இதற்குக் காரணம்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும், அதில் ஒளிபரப்பப்படும்
விளம்பரங்களுக்கும் தணிக்கை செய்வதற்கான நேரம் இதுதான் நாம் தாமதிக்கும்
ஒவ்வொரு மணித்துளியும் ஒரு நஞ்சு விதை முளைக்கிறது என்பதை உணர்ந்து
துரிதகதியில் உரியவர்கள் செயல்பட்டால் நாளைய சமுதாயம் காக்கப்படும்.
நாம் நம் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லும் சமுதாய சூழ்நிலைகளே அவர்களின்
மிகப் பெரிய சொத்து. நல்லதை விதைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, நஞ்சை
விதைக்காமல் இருந்தால் போதும்.
கலாசார காவலர்களே!!! பப்புக்குச்செல்வதை நிறுத்தி, இதுபோல் நம் வாழ்வியலை
சிதப்பவர்களை களைஎடுங்கள்.
இதில் சில நல்ல விளம்பரங்களும் வருகின்றன , Vodofone பொம்மைகள்
விளம்பரம், ஹவெல்ஸ் வயர் விளம்பரம், 'செக்கச்லோவாக்கிய' என்று சொல்லும்
அந்த குழந்தை விளம்பரம், என்று வெகு சிலவே ரசிக்கும்படி இருக்கிறது.
இவைதவிர்த்து, எல்லா விளம்பரமும் பெண்ணை எப்படி கவர்வது, பெண்ணிடம்
எப்படி காதலைச் சொல்வது என்பனவையே. எல்லாமே ஒரு பொய்யான மாயையை
தோற்றுவிக்கின்றன. என்னமோ இவர்கள் பொருளை உபயோகிக்கவில்லை என்றால் உலகில்
பெண்களோ, ஆண்களோ காதலிக்கவே முடியாது, வெள்ளைதான் அழகு, இந்த பானத்தைக்
குடிக்காத பிள்ளைகள் அறிவில்லாமல் போகும் என்று ஒரு போய்த் திரையை
எல்லோர் முன்னாடியும் வைக்கின்றன.
என் அப்பன் பாட்டன் காதலிக்கவில்லையா, கல்யாணம்தான் கட்டிக்
கொள்ளவில்லையா? ஆதலினால் உலகத்தீரே!!! பஜார்ல உஜ்ஜாரா இல்லன்னா நம்ம
நிஜார.....
"திருடனாப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!!!"
Comments