நட்புக்காக….



கண்ணீர் கரைந்த
உன் சட்டைக்கும்
புறவாய் வழிந்த
உன் கால்ச்சராய்க்குமே
தெரியும்….
நான் உன்
தோளில்
குழந்தையானதும்….
மடியில்
மழலையானதும்….
__{*_*}__

நீ
திட்டியதிலிருந்து
எனக்குப் பிடித்த மிருகம்
‘எரும’ என்றானது….

__{@_@}__


உன் ‘சொல்லு’ உம்
என் ‘அப்பறம்’ உம்
உள்ளவரை
நம் நட்புரையாடல்
தீர்வதற்கில்லை……

__{*..*}__
 
தாச்சுக்கவும்
தலைகோதவும்
‘மும்மா’ செய்யவும்
‘மூஞ்சி’ சொல்லவும்
‘வெவ்வெவ்வே’ திட்டவும்
வேதனை துடைக்கவும்
நட்பீந்த வரம் நீ….

__{*,,*}__


வானுக்கேது
முதலும் முடிவும்….?

நட்புக்கேது
நாளும் கிழமையும்….?

நமக்குள் ஏது
உன்னதும் என்னதும்….?

__{*=*}__

நானாய்
சாய்ந்துகொள்ள
மறந்தபோதும்
தானாய்
சாய்த்துக்கொள்ள
மறுக்காத
உன் தோள்களுக்கே
சமர்ப்பணம்
உயிருக்குயிரான
என் நட்பு….!!!

__{*~*}__

அம்மு
ம்மு
தங்க புள்ள
குட்டி செல்லம்
மா
அமுமா
உனக்கு நான்
எதுவானாலும்
எனக்கு
‘தாயுமானவன்’
நீ….!!!

__{*@*}__

‘நானிறந்தபின்பு
சுமந்து செல்லும்
நால்வரில் ஒருவனாய்
நீயிருக்க வேண்டும்’
என்பது மட்டுமே
நட்பின் பெயரால்
நானிடும் கட்டளை….

__{*$*}__

உயிரின் உயிரான,
உயிரோடு உறவான,
உயிரினும் மேலான
உயிர் தோழனுக்கு….
செல்லமு…. உனக்காக டீ….. :)

Comments

bala said…
Arumai...Arumai... erumai!!
Anonymous said…
nice.
doing great work.Keep going...

தோல்வி

உயிரே நீ நாளை சாவை எதிர் கொள்வதற்காக
இன்று வாழ பழகி கொண்டாய் ...
உயிரே நீ நாளை ஜெய்ப்பதற்காக
இன்று தோல்வி கண்டு பயப்படுவது ஏனோ ?

உங்கள் கவிதை வரியில் இருந்து பிறந்த எனது எண்ணங்கள்