சினமே பகை
மஞ்சுவும், கவியும் கடற்கரை மணலில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தனர். பல நாட்களாகவே, அவர்களுக்குக் கடற்கரையில் மணல் வீடுகட்டி விளையாட வேண்டுமென்று விருப்பம் தான். ஆனால் அண்மையில் வந்த பெருந்தொற்று காரணமாக, கடற்கரைக்குச் செல்லத் தடை இருந்ததால், இரண்டாண்டு கழித்து தற்போது தான் அவர்களின் பெற்றோர்கள் அவர்களைக் கூட்டி வந்துள்ளனர். ஒரு வாரம் முன்னதாகவே திட்டமிட்டதால் இருவரும் விளையாட என்னென்ன எடுத்துச் செல்ல வேண்டும் என்று தங்களது அம்மாக்களிடமும் நீண்ட பட்டியல் ஒன்றைத் தந்தனர். அவர்களுக்குப் பிடித்த இளவரசிக்கு ஒரு அரண்மனையும், அந்த இளவரசி வேலை பார்க்க ஒரு அலுவலகமும் என்று இரண்டு கட்டடங்களைக் கட்ட நினைத்திருந்தனர். “ இளவரசிக்கு எதுக்கு அலுவலகம்? ” என்று மஞ்சுவின் அப்பா கேட்டதற்கு, “ யாராய் இருந்தாலும் அது இளவரசியாவே இருந்தாலும் வேலைக்குப் போகணும், அப்போ தான அவங்களுக்கு வேண்டியதை எல்லாம் அவங்களே வாங்கிக்க முடியும் . எங்க அம்மாலாம் வேலைக்குப் போறாங்களே ” என்று ஒரே குரலில் பதிலளித்தனர் இருவரும். அட அதுவும் சரிதானே? ஒரு வழியாக அன்று மாலை குடும்பத்துடன் அனைவரும் வந்து அவரவருக்கு